இணைய சொந்தங்களே வருக வருக !!!!!!!

Pages

Jul 7, 2009

என்னமோ போங்க




என்ன பண்றாங்க ஏது பண்றாங்க ஒரு மண்ணும் புரிய மாட்டிங்குது.மெத்த படிச்சா மேதாவிகள் வருசத்திற்கு ஒரு முறை பட்ஜெட் தாக்கல் பண்றாங்க நம்ம பாராளுமன்றத்தில.கோட்டு,சூட்டு போட்டு கிட்டு கைல ஒரு தோல் பையா வச்சுகிட்ட டிவி காரங்க காமெராவுக்கு முன்னாடி பொட்டிய தொக்கி காட்டு உள்ளார போறாங்க.போய் அந்த பட்ஜெட் தாக்கல் பண்ணிட்டு ,இது ஏழைகளுக்கான பட்ஜெட் ,விவசாய மக்களுக்கு ஆனா பட்ஜெட் ,மக்களுக்கு ஆனா பட்ஜெட் அப்படீனு வெளில வந்து சொல்லறாங்க.பெரிய பெரிய டிவி காரங்களும் நாலஞ்சு மேதாவிகளை கூட்டிட்டு வந்து உட்கார வச்சு ஒரு வாரத்துக்கு பட்ஜெட் பத்தி பேசறாங்க .

அப்புறம் ஆளுங்கட்சி அரசியல் வாதிகள் இது நான் பார்த்ததிலே மிக சிறந்த பட்ஜெட் ,மக்களுக்கான பட்ஜெட் என்று சொல்லுவாங்க.எதிர்க்கட்சி காரங்க என்ன சொல்லுவாங்க இது மக்களுக்கு மேலும் சுமை அளிக்க கூடிய பட்ஜெட் ,தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்ல என்று சொல்லுவாங்க.சரி விடுங்க

இப்ப என்னுடைய கேள்வி என்னன்னா இத்தன வருசமா பட்ஜெட் போடுறீங்களே ஏன் ஏழை இன்னும் ஏழையாகவே இருக்கிறான்?விவசாய் துறைக்கு இவ்வளவு நிதி அப்படீனு சொல்வீங்க அப்புறம் ஏன் விவசாய் தற்கொலை செஞ்சுகுறாங்க? ஏழை களுக்கான பட்ஜெட் சொல்லறீங்க ஆனா பணக்கறாங்க மேலும் பணக்காரங்க ஆகிகிட்டு இருகாங்க ஏழை மென்மேலும் ஏழை ஆகிட்டு இருகாங்க? ஏன் இந்த பொருளாதார இடைவெளி?அதுல வரி குறைப்பு இதுல வரிகுறைப்பு அப்படீனு சொல்றீங்க ஆனா இங்க விலை வாசி விர்ருனு ஏறிட்டு இருக்கு அது எப்படி சாமி?

இதுக்கு விடை தெரிஞ்ச யாரவது எனக்கு புரியிற மாதிரி சொல்லுங்கோ.

No comments:

Post a Comment